தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வேட்பு மனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களின் இறுதிப் பட்டியல் இன்று மாலை வெளியாகிறது.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ம் தேதி  தொடங்கி 27-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. அதில் மொத்தமாக  ஆயிரத்து 749 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. வேட்புமனுக்கள் மீது வியாழக்கிழமை பரிசீலனை நடைபெற்றது. இதில் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் 664 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. ஆயிரத்து 85 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 

வேட்புமனுக்களைத் திரும்பப் பெற இன்று மாலை வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. நேற்று புனித வெள்ளியையொட்டி அரசு விடுமுறை என்பதால், வேட்புமனுக்கள் திரும்பப் பெறப்படவில்லை. அதனால் இன்று வேட்புமனுக்களைத் திரும்பப் பெறும் நடைமுறை முடிவடைந்த பிறகு, மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் உண்மையான எண்ணிக்கை விவரம் தெரியவரும். 

ஒரே வேட்பாளா் ஒன்றுக்கு மேற்பட்ட மனுக்கள் வரை தாக்கல் செய்திருந்தால் அவற்றில் தேவையில்லாத மனுக்கள் திரும்பப் பெறப்படும். அதன் பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சையாகப் போட்டியிடுவோருக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும். இதற்கான பணிகள் அந்தந்த தோ்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day