அயோத்தி ராமர் கோயிலில் கொடியேற்றினார் பிரதமர் மோடி

எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் சூரியன், ஓம் பொறிக்கப்பட்ட
காவிக் கொடியை பிரதமர் மோடி ஏற்றினார்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோயில் சில ஆண்டுகளுக்கு முன் திறந்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேலும் சில கட்டுமானங்கள் நடைபெற்று வந்த நிலையில் அதன் பணிகள் தற்போது நிறைவடைந்தன. இந்நிலையில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் பிரமாண்ட காவிக் கொடியை பிரதமர் மோடி ஏற்றினார்.

இதற்காக உத்தரபிரதேச மாநிலம் அயோத்யா சென்ற பிரதமர் நரேந்திர மோடி ராமர் பாதையில் காரில் வலம் வந்தார். அவருக்கு பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் பக்தர்களும் உற்சாக வரவேற்பளித்தனர். 

இதனை அடுத்து, அயோத்தி ராமர் கோயில் வளாகத்தில் உள்ள சப்தமந்திரில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார். மகரிஷி வசிஷ்டர், மகரிஷி விஸ்வாமித்திரர், மகரிஷி அகஸ்தியர், மகரிஷி வால்மீகி உள்ளிட்ட சிலைகளை பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.

தொடர்ந்து அயோத்தி ராமர் கோயிலில் பாலராமர் சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு செய்தார். அவருடன் இருந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் ஆகியோரும் வழிபாடு செய்தனர்.

பின்னர் ராமர் கோவிலில் உள்ள 161 அடி பிரமாண்ட கோபுரத்தில் 10 அடி உயரமும், 20 அடி நீளமும் கொண்ட காவிக்கொடியை பிரதமர் மோடி ஏற்றி வைத்தார். ராமரின் வீரத்தையும், அறிவுக்கூர்மையையும் சித்தரிக்கும் வகையில் சூரியன் படமும், ஓம் என்ற எழுத்தும் பொறிக்கப்பட்ட காவிக் கொடியை ஏற்றி வைத்தார்.

Night
Day