"வார்த்தைகளால் விவரிக்க முடியாதளவு இதயம் உடைந்துள்ளது" - பிரதமர் மோடி வேதனை

எழுத்தின் அளவு: அ+ அ-

விமான விபத்து குறித்த தகவல் அறிந்த  பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஆகியோரைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதை உறுதி செய்ய அவர்களை உடனடியாக அகமதாபாத்திற்குச் செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அகமதாபாத்தில் நடந்த துயரச் சம்பவம் அதிர்ச்சி மற்றும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு இதயத்தை உடைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த சோகமான நேரத்தில், தனது எண்ணங்கள் பாதிக்கப்பட்ட அனைவருடனும் உள்ளதாக கூறியுள்ள பிரதமர் மோடி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பணியில் உள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Night
Day