"சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக முறைகேடு செய்து விட்டது" : கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக முறைகேடு செய்து இருப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

சண்டிகர் மேயர் தேர்தலில் 36 கவுன்சிலர்கள் நேற்று வாக்களித்தனர். அதில் பாஜக மேயர் வேட்பாளர் 16 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் 12 வாக்குகள் பெற்ற நிலையில், 8 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்‍கப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவால், சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் பாஜக முறைகேடு செய்து இருப்பதாகவும், இதனை ஒருபோதும் ஏற்க இயலாது என்றும் குறிப்பிட்டார். பாஜக ஜனநாயகத்தை கொள்ளையடித்து விட்டதாக பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானும், நாட்டுக்‍கு துரோகம் செய்து விட்டதாக ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தாவும் தெரிவித்தனர்.

Night
Day