எழுத்தின் அளவு: அ+ அ- அ
அமலாக்கத்துறையினரின் பிடியில் இருந்து தப்புவதற்காக சட்ட ஆலோசனை நடத்த ராஞ்சியில் இருந்து திடீரென ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் டெல்லி சென்று திரும்பியது தெரியவந்துள்ளது.
ராணுவ நில முறைகேடான விற்பனை, சட்டவிரோத பணப்பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 10வது முறையாக ஹேமந்த் சோரனுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் அவர் அமலாக்கத்துறையினரின் பிடியில் இருந்து தப்பவே ராஞ்சியில் இருந்து திடீரென டெல்லி சென்றார். இந்நிலையில், தனி விமானத்தில் டெல்லி சென்ற ஹேமந்த் சோரன் 30 மணி நேரம் எங்கே இருந்தார் என்பது தெரியாத நிலையில், காரில் வாரணாசி சென்று அங்கிருந்து ராஞ்சி சென்றுள்ளார். நீதிமன்றத்தை நாடி சட்ட ரீதியாக தாம் நிவாரணம் பெற முடியுமா என்பது குறித்து டெல்லியில் சட்ட வல்லுநர்களுடன் ஹேமந்த் சோரன் ஆலோசனை நடத்தியதாக தெரியவந்துள்ளது.