"ஊழல் செய்வது எப்படி என பள்ளி நடத்தி வருகிறார் பிரதமர் மோடி" - ராகுல் காந்தி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் மோடி, நாட்டில் ஊழல் செய்வது எப்படி என்பதை கற்றுத் தரும் பள்ளியை நடத்தி வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் ரெய்டு நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி என்பது குறித்து பிரதமர் மோடியே விரிவாக பாடம் கற்பித்து வருவதாக விமர்சித்துள்ளார். முழு அறிவியல் ஊழல் என்ற பாடத்தின் கீழ் ரெய்டு நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி? நன்கொடை பெற்ற பிறகு ஒப்பந்தங்கள் எவ்வாறு வினியோகிக்கப்படுகின்றன?  என்பது குறித்து அவரே விரிவாக பாடம் கற்பிப்பதாகவும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

varient
Night
Day