"ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படும் நாள் வரும்" - உள்துறை அமைச்சர் அமித் ஷா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவில் ஆங்கிலம் பேசுவதற்காக வெட்கப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.


டெல்லியில் நடைபெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்ஹோத்தி எழுதியுள்ள புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், இந்திய மொழிகள் நம் நாட்டின் அடையாளத்தின் ஆன்மாவாக இருப்பதாக கூறினார். இந்தியாவின் மொழியியல் பாரம்பரியத்தை மீட்டெடுத்து, தாய்மொழிகள் மீது பெருமையுடன் உலகை வழிநடத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறிய அமித் ஷா,  இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள், அத்தகைய சமூகத்தின் உருவாகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று குறிப்பிட்டார்.

varient
Night
Day