புதுக்கோட்டை: திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் மாசிமக திருவிழா தொடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் மாசிமகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக திருவப்பூர் அருகே உள்ள காட்டு மாரியம்மன் கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலை ஊர்வலமாக   முத்துமாரியம்மன் சன்னதிக்கு எடுத்து வரப்பட்டு, சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து ஆலயத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் காப்புக் கட்டி கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.

varient
Night
Day