நாகை: ஸ்ரீகைலாசநாதசுவாமி கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கிராம மக்கள் சீர்வரிசை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை மாவட்டம் செம்பியன்மாதேவி ஸ்ரீ கைலாசநாதசுவாமி கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு செம்பியன்மகாதேவியருக்கு கிராம மக்கள் சீர்வரிசை எடுத்து வந்து மரியாதை செலுத்தினர். செம்பியன் மகாதேவியருக்கு பால், பன்னீர் உள்ளிட்ட திரவிய பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து செம்பியன் மகாதேவி கிராம மக்கள், மேள தாளங்கள் முழங்க சீர்வரிசை எடுத்து வந்து வழிபட்டனர். 

Night
Day