தேவகோட்டையில் இருந்து தைப்பூசத்திற்காக புறப்பட்ட 46 காவடிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இருந்து பழனி தைப்பூசத்திற்கு 46 காவடிகள் புறப்பட்டன. தேவகோட்டை நகரில் முதலியார் மற்றும் நகரத்தார்கள் பல நூறு ஆண்டுகளாக பழனி தைப்பூசத்திற்கு காவடி கட்டி பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். அதேபோல் இந்த ஆண்டு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தொடங்கியது. நகரின் முக்கிய வீதி வழியாக நகர்வலம் வந்து நேற்றிரவு சிலம்பணி சிதம்பர விநாயகர் கோவிலில் தங்கி சிறப்பு பூஜை அபிஷேகம் நடத்தி இன்று காலை கோவிலில் இருந்து புறப்பட்டு திருப்பத்தூர் சாலை வழியாக சென்றது. செல்லும் வழியில் பொதுமக்கள் காவடிக்கு மாலை அணிவித்தும் வேலுக்கு பன்னீர் ஊற்றி அபிஷேகம் செய்து அனுப்பி வைத்தனர்.

varient
Night
Day