உத்தரப்பிரதேசம் : திரை வைத்து மூடப்பட்ட மசூதிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர் மாவட்டத்தில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு, பதற்றமான இடங்களில் உள்ள மசூதிகளின் முகப்பு பகுதி தார் பாய்கள் கொண்டு மூடப்பட்டுள்ளன. ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது மசூதியின் மீது வண்ணப்பூச்சுகள் வீசப்படுவதை தவிர்க்கவும், வழிபாட்டுக்கு வருபவர்கள் மீது சாயப்பொடிகள் படுவதை தவிர்க்கவும் மசூதி நிர்வாகம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. மேலும், அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக மசூதிகளின் முன்னால் ஆங்காங்கே காவல்துறையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Night
Day