ஆழித்தேர் - மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிறப்பித்த உத்தரவு - பொது தேர்வு எழுதும் மாணாக்கர்கள் தேர்வுக்கு செல்ல முடியாத அவலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவாரூர் ஆழித்தேர் திருவிழாவையொட்டி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிறப்பித்த உத்தரவால் அரசு பொது தேர்வு எழுத உள்ள மாணவ-மாணவியர்கள் தேர்வு மையத்திற்கு செல்ல முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது. திருவாரூர் ஆழித்தேரோட்டம் வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம், திருவாரூர் மாவட்டத்தில் போக்குவரத்தில் மாற்றம் செய்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக அரசு பொதுத்தேர்வு எழுத பேருந்து மூலமாக வரும் தொலைதூர கிராமப்புற மாணவ மாணவியர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகும் நிலை எழுந்துள்ளதாக கூறுப்படுகிறது. எனவே இந்த விவகாரத்தில், உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென கல்வியாளர்கள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day