நாடு முழுவதும் கொரோனா தொற்று 4,000-ஐ கடந்தது

எழுத்தின் அளவு: அ+ அ-

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த 69 வயது பெண் உட்பட ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு உலகம் முழுவதும் பெருந்துயரை ஏற்படுத்திய கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் மெல்ல மீண்டு எழுந்து வந்த நிலையில், தற்போது உருமாறிய கொரோனா மீண்டும் பரவி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 65 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்து 26 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர்  டெல்லியில் 47 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 483 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 26 பேர் பாதிக்கப்பட்டதை அடுத்து, கொரேனா பாதிப்பு எண்ணிக்கை 216 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் புதிதாக 35 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட 69 வயது பெண் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day