திமுகவினர் அராஜகம் - தீப்பற்றி எரிந்த கடை

எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே திமுகவினரின் நிகழ்ச்சியில் திடீரென சரவெடி வெடித்து அருகில் உள்ள கடையில் தீப்பிடித்ததால் பதற்றம் ஏற்பட்டது.

சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது விளம்பர திமுகவினர் வைத்த சரவெடி வெடித்து சிதறி அருகில் உள்ள கடையில் தீப்பிடித்தது. பொதுமக்கள் விரைந்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட இடம் பஜார் என்பதால், இங்கு வெடி வெடிக்க கூடாது என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி திமுகவினர் வைத்த சரவெடி வெடித்தது. பெயரளவிற்கு மட்டுமே எச்சரிக்கை பலகை வைக்காமல் அதனை முழுமையாக கடைப்பிடிக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day