ஒரே ஒரு மாணவருக்காக மட்டும் செயல்படும் அரசு தொடக்கப்பள்ளி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஒரே ஒரு மாணவருக்காக மட்டும் அரசு பள்ளி செயல்பட்டு வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாடானை வட்டத்தில் உள்ள 77 அரசு தொடக்க பள்ளிகளில் கட்டியனேந்தல் அரசு தொடக்கப் பள்ளியில் கடந்த 5 வருடங்களாக புதிய மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. இதனால் அங்கு ஒரே ஒரு மாணவர் மட்டுமே பயின்று வருகிறார். அவர் தற்போது 4-ஆம் வகுப்பில் இருந்து 5-ஆம் வகுப்பிற்கு தேர்வாகியுள்ளார். அவருக்கு குஞ்சங்குளம் பள்ளியிலிருந்து மாற்றுப் பணி ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்தி வருகிறார். மாணவருக்கு காலை மற்றும் மதிய உணவுகள் மற்ற அரசு பள்ளிகளில் இருந்து கொண்டு வரப்படுகிறது. யாருமே இல்லாத இந்த பள்ளியில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய சமையலறை, கழிப்பறை கட்டப்பட்டுள்ளது  

Night
Day