பட்டாசு ஆலை விபத்தில் 3 பேர் பலி - புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஸ்டாண்டர்டு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் ஐந்து அறைகள் முற்றிலும் தரைமட்டமானதில் 3 தொழிலாளர்கள் பரிதாபகரமாக உயிரிழந்திருப்பது மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பட்டாசு ஆலையில் ஏற்படும் வெடி விபத்துகளால் ஏழை, எளிய, சாமானிய தொழிலாளர்கள் உயிரிழப்பது பற்றி துளியும் கவலைப்படாத இந்த விளம்பர அரசுக்கு புரட்சித்தாய் சின்னம்மா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஸ்டாண்டர்டு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் ஐந்து அறைகள் முற்றிலும் தரைமட்டமானதில் 3 தொழிலாளர்கள் பரிதாபகரமாக உயிரிழந்திருப்பது மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பட்டாசு ஆலையில் ஏற்படும் வெடி விபத்துகளால் ஏழை, எளிய, சாமானிய தொழிலாளர்கள் உயிரிழப்பது பற்றி துளியும் கவலைப்படாத இந்த விளம்பர அரசுக்கு, புரட்சித்தாய் சின்னம்மா கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். அதேபோன்று சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவின் போது, 

நிகழ்ந்த பட்டாசு வெடி விபத்தில் 4 நபர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனை அளிப்பதாக சின்னம்மா தெரிவித்துள்ளார்.
கோயில் திருவிழாக்களில் மக்களுக்கு தேவையான பாதுகாப்பினை அளிக்க திமுக அரசு தவறிவிட்டதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் திருவிழா காலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் 

தவறாமல் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை அந்தந்த மாவட்ட நிர்வாகம் தவறாமல் கண்காணித்திட வேண்டும் என்று புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தி உள்ளார். எனவே திமுக தலைமையிலான அரசு மக்களுக்கு பயனற்ற விசயங்களுக்கு முன்னுரிமை அளித்து, நேரத்தை வீணாக்குவதை விட்டுவிட்டு தமிழக மக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்ய இந்த விளம்பர அரசு முன் வர வேண்டும் என புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.

திமுக தலைமையிலான விளம்பர ஆட்சியில், இந்த ஆண்டு தொடக்கத்திலேயே விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 நபர்கள் உயிரிழந்ததை சுட்டிக்காட்டிய சின்னம்மா, அடுத்த மாதமே ஆனையூர் என்ற இடத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவரும், தருமபுரி, கம்பைநல்லூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் மூன்று பெண்களும் உயிரிழந்ததையும் குறிப்பிட்டுள்ளார்.

அதன்பிறகு விருதுநகர் சின்னவாடி கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 நபர்கள் உயிரிழந்தனர். தற்போது மீண்டும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு 3 நபர்கள் உயிரிழந்துள்ளனர். திமுக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றது முதல், விருதுநகர் மாவட்டத்தில் தொடரும் பட்டாசு ஆலை வெடிவிபத்துகளால் 

சுமார் 70-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் விபத்துகள் நடந்துள்ளதாகவும், 130-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இறந்துள்ளதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். இதில் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ள புரட்சித்தாய் சின்னம்மா, 

திமுக தலைமையிலான ஆட்சியில் பட்டாசு தொழிலாளர்களின் பாதுகாப்பு என்பது மிகவும் கேள்விக்குறியாகிவிட்டதாக புரட்சித்தாய் சின்னம்மா வேதனை தெரிவித்துள்ளார். தனியார் பட்டாசு ஆலைகளில் உரிய பாதுகாப்பு நெறிமுறைகள் சரியாக பின்பற்றப்படாததும், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததுமே உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக செய்திகள் தெரிவிப்பதாக சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

பட்டாசு தொழில் நிறுவனங்கள் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்கின்றனவா? என்பது குறித்து தமிழக அரசு முறையான ஆய்வுகள் எதையும் செய்வதில்லை என்பது தொடர்ந்து நிரூபணமாகி வருவதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2011ஆம் ஆண்டு பட்டாசு தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியில்.. 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பட்டாசு பயிற்சி மையத்தை தொடங்கி வைத்ததை புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் திமுக தலைமையிலான ஆட்சியில் அதற்கு போதிய அலுவலர்கள் நியமிக்கப்படாததால் தற்போது இந்த பயிற்சி மையம் செயல்பாடு இன்றி காட்சி பொருளாகவே இருந்து வருவதாக புரட்சித்தாய் சின்னம்மா குற்றம்சாட்டியுள்ளார். திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றுக்கொண்டது முதல் எல்லாவற்றிலும் அலட்சியப்போக்கினை கடைபிடிப்பதாலும், 

மக்களை மறந்து சுயநலப்போக்கோடு செயல்படுவதாலும் தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி கடும் பாதிப்படைந்து வருவதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். இந்த இரு வேறு விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என ஆண்டவனை வேண்டுவதாக சின்னம்மா தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்தில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து நடைபெறாத நாட்களே இல்லை என்றளவுக்கு.. தொடர்ந்து பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் ஏற்பட்டு, அதில் ஏதும் அறியாத அப்பாவி தொழிலாளர்கள் விலைமதிப்பற்ற உயிர்களை இழப்பது மிகவும் வேதனை அளிப்பதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

திமுக தலைமையிலான அரசு மக்கள் படும் துன்பங்களை வேடிக்கை பார்ப்பதைத் தவிர அவர்களுக்கு தேவையான எந்தவித பாதுகாப்பையும், எந்நாளும் அளிக்க போவது இல்லை என்றும் இதற்கெல்லாம் ஆட்சி மாற்றம் ஒன்றே நிரந்தர தீர்வாக அமையும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்வதாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா திட்டவட்டமாக கூறியுள்ளார்.. 

Night
Day