சன் குழுமத்தை துரத்தும் கேபிள் ஆபரேட்டர்களின் சாபம்..!

எழுத்தின் அளவு: அ+ அ-

சன் குழுமத்தை சொந்தம் கொண்டாடி மாறன் வாரிசுகளின் குடும்ப சண்டை வீதிக்கு வந்திருக்கும் நிலையில், சன் குழுமம் எப்படி உருவாக்கப்பட்டது என்பதன் வரலாற்றை சற்றே திரும்பிப் பார்ப்போம்...

1996-ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டதுதான் சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனம். அந்த நிறுவனமே, பின்னர் சன் டிவி நெட்வொர்க்காக உருவானது. ஆரம்பத்தில், சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனம் சென்னையின் சில பகுதிகளில் கேபிள் டிவி சேவையை வழங்கி வந்த நிலையில் தமிழகத்தின் கேபிள் தொழிலை திமுக ஆட்சி அதிகாரத்தின் பேரில் தங்களது ஏகபோக உரிமையாக மாற்றியது.

பெருமளவில் வாடிக்கையாளர்களை வைத்திருந்த ஹாத்வே கேபிள் நிறுவனத்தின் கேபிள் கம்பிகளை அறுத்தெறிந்தும், அதைச் சார்ந்திருந்த கேபிள் ஆப்ரேட்டர்களை அடியாட்களைக் கொண்டு மிரட்டியும், இந்த நிறுவனத்தை தமிழகத்தை விட்டே விரட்டியடித்து விட்டு கேபிள் தொழிலை தங்களது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது தி.மு.க-வின் குடும்ப நிறுவனமான சுமங்கலி கேபிள் விஷன். அதன் பின்னர் அந்த நிறுவனம் சேனல்களை ஒளிபரப்பத் தொடங்கியதே தற்போது பல லட்சம் கோடி மதிப்பு கொண்ட சன் டிவி நெட்வொர்க்காக விரிவடைந்துள்ளது.

இதனால் கேபிள் தொழிலை நம்பியிருந்த பல ஆப்பரேட்டர்கள் வாழ்வாதாரத்தை இழந்து நடுதெருவில் நிறுத்தப்பட்டனர். அதுமட்டுமின்றி தமிழகத்தின் கேபிள் தொழில் தங்களது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த சன் குழுமம், கேபிள் இணைப்புகளின் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தி ஏக போக ஆதிக்கம் செலுத்த தொடங்கியது.

இதனால் திமுக குடும்ப ஆதிக்கத்தில் சிக்கி மீளமுடியாமல் இருந்தனர் தமிழக மக்கள். கேபிள் தொழில் ஆபரேட்டர்கள் அனைவரும் மாறன் சகோதரர்களின் நிறுவனத்தையே சார்ந்திருக்க வேண்டிய கட்டாய நிலை இருந்தது. 

இந்த நிலையை மாற்றி புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியில் அரசு தனது சொந்த கேபிள் டிவி நெட்வொர்க்கைத் தொடங்க மத்திய அரசின் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம், டிஜிட்டல் லைசென்ஸ் பெற்றது. 

அதன்படி 2011ம் ஆண்டு மிகக் குறைந்த கட்டணத்தில், மக்கள் பயன்பெறும் வகையில், 24,000 கேபிள், 'டிவி' ஆப்பரேட்டர்கள் வழியே, 40 லட்சம் இணைப்புகளுடன் அரசு கேபிள் டிவி செயல்பட்டது.  மாநிலம் முழுதும், 30 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் வினியோகிக்கப்பட்டன. இதனால் லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் பயனடைந்து வந்தனர். ஆனால் தற்போது, அரசு கேபிள் நிறுவனத்தையும் முடக்கி, மீண்டும் கேபிள் தொழிலை ஒட்டுமொத்தமாகக் கைப்பற்ற சேவை குறைபாடு என்ற பேரில் மீண்டும் அராஜகத்தை கட்டவிழ்த்து வருகிறது திமுக.

தற்போது ஆட்சி பொறுப்பில் இருக்கும் தி.மு.க அரசு, கேபிள் சேவையை முறையாக பராமரிக்காததால் சேவை குறைபாடு, செட்டாப் பாக்ஸ் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் ஏழை எளிய மக்கள் அரசு கேபிள் சேவையை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மென்பொருள் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய, ஏ.எம்.சி., தொகையை திமுக அரசு முறையாக செலுத்தாததால், அந்நிறுவனத்தால் தமிழகம் முழுதும் அரசு கேபிள் 'டிவி' ஒளிபரப்பில் தடங்கள் ஏற்பட்டது. இதனால் குறைந்த கட்டணத்தில், ஏழை, நடுத்தர மக்கள், 'டிவி' நிகழ்ச்சிகளை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக மீண்டும் சன் குழுமத்தில் கேபிள் சேவை ஆதிக்கம் என்னும் புதைகுழிக்குள் மக்கள் மீண்டும் சிக்கி தவிக்கக்கூடிய காட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளதோடு, அரசு கேபிள் தொழிலை நம்பியுள்ள, 15,000க்கும் மேற்பட்ட கேபிள், 'டிவி' ஆப்பரேட்டர்களும், கேபிள், 'டிவி' தொழில்நுட்ப ஊழியர்களின் குடும்பங்களும் மிகுந்த துயரத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இப்படி ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடித்து குடும்பத்தை வளர்க்கும் திமுக அரசு உச்சாணி கொம்பில் ஆடிக்கொண்டிருக்க, ஏழை எளிய மக்களின் சாபமோ என்னவோ இன்று சன் குழுமத்தை சொந்தம் கொண்டாடுவதில் மாறன் சகோதரர்களின் குடும்ப சண்டை வக்கீல் நோட்டீஸ் விடும் அளவுக்கு சந்தி சிரிப்புக்கு ஆளாகியுள்ளது. 

varient
Night
Day