யோகா நிகழ்ச்சி : அடையார் கடற்கரையில் இந்திய முப்படைகள் கூட்டாக பங்கேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

11-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சென்னை அடையார் கடற்கரையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்திய முப்படைகள், மத்திய தொழில் பாதுகாப்புப் படை, தேசிய மாணவர் படையினர் ஆகியோர் கூட்டாக பங்கேற்று யோகா பயிற்சி மேற்கொண்டனர். இதில் ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் கரண்பீர் சிங் பிரார், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை தளபதி ரியர் அட்மிரல் சதீஷ் ஷெனாய் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். சுமார் 1 மணி நேரம் நடைப்பெற்ற இந்த நிகழ்வில் பல்வேறு வகையான யோகா பயிற்சிகள் செய்யப்பட்டது. 

Night
Day