கடலோர காவற்படை சார்பில் டிரையத்லான் சாம்பியன்ஷிப் போட்டி : வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காரைக்காலில் இந்திய கடலோர காவற்படை சார்பில் டிரையத்லான் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

ராணி துர்காவதி கப்பல் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இப்போட்டியை இந்திய கடலோர காவற்படை கமாண்டர் பிரதீப் குமார் ஷாகா தொடங்கி வைத்தார். இதையடுத்து, வீரர்கள் காரைக்கால் கடற்கரையில் 750 மீட்டர் நீச்சல் போட்டியில் ஈடுபட்டு, தொடர்ந்து 20 கிலோமீட்டர் மிதிவண்டி ஓட்டி, அதனைத் தொடர்ந்து 5 கிலோமீட்டர் தூரம் வரை ஓட்டபந்தயம் என 3 போட்டிகளில் ஈடுபட்டனர். இதையடுத்து வெற்றி பெற்ற வீரர்களுக்கு கமாண்டர் விஜய் விஸ்வநாதன் பரிசுகளை வழங்கினார்.

Night
Day