5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் வெப்பநிலை மேலும் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள் மாவட்டங்களில் 107 புள்ளி 6 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகும் எனவும், இதர மாவட்டங்களில் 102 புள்ளி 2 டிகிரி  பாரன்ஹீட் வெப்பம் பதிவாகும் என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day