தமிழகம்
ரிப்பன் மாளிகை அருகில் டெண்ட் அடித்து போராட்டம்
மாநகராட்சி தூய்மை பணியினை தனியார்மயப்படுத்தும் முயற்சிக்கு கண்டனம் -சென?...
3 ஆண்டு சிறைத்தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளித்துள்ளார். பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் வழங்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து ராஜேஷ்தாஸ், விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கில் வாதாட ராஜேஷ்தாஸ் தரப்பு தொடர்ந்து கால அவகாசம் கேட்டு வந்தது. இந்த நிலையில் இன்று கண்டிப்பாக ஆஜராக வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து ராஜேஷ்தாஸ் இன்று நீதிமன்றத்தில்ஆஜராகி ஒரு மணி நேரம் வாதாடி தனது தரப்பு விளக்கத்தை அளித்தார். இதையடுத்து வரும் 7-ஆம் தேதி வரை ராஜேஷ்தாஸ் வாதாட அனுமதி வழங்கி விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.
மாநகராட்சி தூய்மை பணியினை தனியார்மயப்படுத்தும் முயற்சிக்கு கண்டனம் -சென?...
மலையாளத்தில் வெளியான உள்ளொழுக்கு திரைப்படம் சிறந்த மலையாள திரைப்படமாக த?...