ஸ்டாலின் பற்றி உளறிக்கொட்டிய ஆ.ராசா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

"இதுபோன்று பொய் சொல்லும் முதலமைச்சரை நான் பார்த்ததில்லை" என ஆ.ராசா பேசியது திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிக்கதாசம்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக எம்.பி. ஆ.ராசா அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் பேசிய போது, தமிழகத்திற்கு நிவாரணம் நிதியை தராத மோடி அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என பேசுவது வேடிக்கையாக உள்ளது என்றார். தொடர்ந்து பேசிய அவர், இதுபோல பொய் சொல்லும் முதலமைச்சரை நான் பார்த்ததில்லை என கூறினார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட அவர் இப்படிபட்ட ஒரு பிரதம அமைச்சரை பார்க்கவில்லை என்று கூறி சமாளித்தார்.

Night
Day