வழக்கறிஞரை தாக்கிய மருத்துவர் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அரசு மருத்துவமனையில் வழக்கறிஞரை தாக்கிய மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சுதாகர் என்ற வழக்கறிஞர் சென்று உள்ளார். அப்போது பணியிலிருந்த மருத்துவர் ராஜீவ் கணேஷ்  என்பவர், புறநோயாளிகள் நேரம் முடிந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே, மருத்துவர் வழக்கறிஞரை தாக்கி உள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. மேலும், தகவலறிந்து பொன்னேரி மருத்துவமனையை சக வழக்கறிஞர்கள் முற்றுகையிட்டனர். இதுதொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மருத்துவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

Night
Day