வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் பகுதியில் ஆய்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் பகுதியை தொல்லியல் குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வடலூரில் வள்ளலார் கோவில் அமைந்துள்ள சத்தியஞான சபை முன், 99 கோடியே 6 லட்சம் ரூபாய் செலவில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க அரசு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்தும், வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தடை கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்த நிலையில் 3 பேர் கொண்ட தொல்லியல் நிபுணர் குழு அமைத்து, ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Night
Day