ராமேஸ்வரம், காரைக்கால் பகுதி மீனவர்கள் 33பேர் விடுதலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் காரைக்கால் பகுதி மீனவர்கள் 33 பேர் விடுதலை செய்யப்பட்டனர். காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 15ம் தேதி நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த 15 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. இதேபோல் கடந்த 17ம் தேதி ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சென்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 21 பேரை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த நிலையில் சிறை காவல் தேதி முடிந்து இலங்கை ஊர்க்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 33 பேர் விடுதலை செய்யப்பட்டும், இரண்டு மீனவர்களுக்கு 6 மாத சிறை தண்டனையும், ஒருவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Night
Day