எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னையை அடுத்த நீலாங்கரையில் உள்ள தனியார் பொழுதுபோக்கு மையத்தில் ராட்சத ராட்டினம் பழுது ஏற்பட்டது தொடர்பாக நிர்வாகம் விளக்கம் அளிக்க காவல்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
நீலாங்கரையில் பிரபல தனியார் பொழுதுபோக்கு மையம் செயல்பட்டு வருகிறது. கோடை விடுமுறை என்பதால் ஏராமான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் அங்கு சென்று பொழுதை கழித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு உள்ள ராட்சத ராட்டினம் 120அடி உயரத்துக்கு மேல் சென்ற நிலையில் தொழில்நுட்ப கோளாறால் மேலேயே நின்றுவிட்டது. இதனால் 120 அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கிய மக்கள் அச்சத்தில் கூச்சலிட்டனர். இதையடுத்து தொழில்நுட்ப கோளாறரை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நீலாங்கரை போலீசார், துரைப்பாக்கம், கிண்டி, நீலாங்கரை தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதையடுத்து 3 மணி நேரபோராட்டத்திற்கு பிறகு அந்தரத்தில் தொங்கிய மக்கள் 'பிராண்டோ லிப்ட்' மூலமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து தனியார் பொழுதுபோக்கு மையத்தை தற்காலிகமாக மூட, அதன் நிர்வாகத்திற்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தனியார் பொழுதுபோக்கு பூங்கா நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு காவல்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.