ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூவரும் இலங்கைக்கு பயணம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூவரும் தங்களது சொந்த நாடான இலங்கைக்கு சென்றனர். கொலை வழக்கில் தொடர்புடையவர்களாக கருதப்பட்டு வந்த முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், சாந்தன் ஆகியோர் கடந்த 32 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 2022ம் ஆண்டு 4 பேருக்கும் உச்சநீதிமன்றம் விடுதலை அளித்த நிலையில், அவர்களை சில காலம் சிறப்பு முகாமில் அடைக்க உத்தரவிட்டது. கடந்த மாதம் சிறப்பு முகாமில் இருந்த சாந்தன் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததால், தங்களை உடனடியாக விடுதலை செய்ய மூவரும் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, சென்னை விமான நிலையத்திலிருந்து இலங்கை செல்லும் விமானத்தில் மூவரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Night
Day