தேவர் திருமகனார் ஜெயந்தி விழா - அக்.30ல் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மரியாதை

எழுத்தின் அளவு: அ+ அ-

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் 118வது பிறந்த நாள் மற்றும் 63வது குருபூஜை விழாவை முன்னிட்டு வரும் 30ம் தேதி பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்திற்கு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா நேரில் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தவுள்ளார்.

கழகப் பொதுச்செயலாளர் முகாம் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் 118வது பிறந்த நாள் மற்றும் 63வது குருபூஜை விழாவை முன்னிட்டு வருகின்ற 30ஆம் தேதி வியாழக்கிழமை காலை 11 மணியளவில் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனார் நினைவிடத்திற்கு கழக பொதுச் செயலாளர், புரட்சித்தாய் சின்னம்மா நேரில் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாக கருதி வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனார் அவர்களின் பிறந்த நாளை, தேவர் ஜெயந்தி விழாவாக சிறப்பாக கொண்டாடுகிறோம் - இந்த பெருமைக்குரிய விழாவில் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் வழிவந்த கழகத் தொண்டர்களும், கழக நிர்வாகிகளும், பொது மக்களும் ஜாதி, மத பேதமின்றி, அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனார் அவர்களுக்கு மரியாதை செலுத்தி, விழாவினை சிறப்பிக்க வேண்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுவதாக கழகப் பொதுச்செயலாளர் முகாம் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day