எழுத்தின் அளவு: அ+ அ- அ
தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்று நடைபெறவுள்ள 16ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில், அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, கலந்து கொண்டு இலங்கை போரில் உயிர்நீத்த தமிழ் உறவுகளுக்கு மலரஞ்சலி செலுத்துகிறார்.
இது தொடர்பாக கழகப் பொதுச் செயலாளரின் முகாம் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை போரில் தமிழினத்தை கொன்று குவித்த நிலையில், 2009ம் ஆண்டு மே 18ம் தேதி அதன் உச்சகட்டமாக பெரும்பாலான தமிழர்கள் அழிக்கப்பட்ட நாளினை, தமிழினப் படுகொலை நாளாக நினைவில் கொள்கின்ற வகையில், ஒவ்வொரு ஆண்டும் தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தமிழின தலைவர்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது.
அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, இலங்கை தமிழர்களின் முன்னேற்றத்திற்காகவும் அவர்களது உரிமையை பாதுகாத்திடவும் அவர்களுக்கு எந்நாளும் தோளோடுதோள் நின்று பயணித்து வருகின்றார் -
இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெறவுள்ள 16ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் முற்றம் நினைவு நாள் நிகழ்வில் புரட்சித்தாய் சின்னம்மா கலந்து கொண்டு, இலங்கை போரில் உயிர் தியாகம் செய்த நம் தமிழின உறவுகளின் நினைவாக அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி மலரஞ்சலி செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.