மும்பையில் waves உச்சி மாநாட்டை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

எழுத்தின் அளவு: அ+ அ-

 பிரதமர் மோடி தலைமையில் திரைத்துறையினர் பங்கேற்கும் வேவ்ஸ் மாநாட்டில் பங்கேற்க திரைப்பிரபலங்கள் மும்பையில் குவிந்துள்ளனர்.

ஊடகம், தொலைக்காட்சி சேனல்கள், ஓ.டி.டி., தளங்கள் மற்றும் திரைக்கலைஞர்களுக்கு 'வேவ்ஸ்' எனப்படும் உலக ஒலி ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு இன்று தொடங்குகிறது. இந்த மாநாடு இன்று தொடங்கி வரும் 4ம் தேதி வரை நடைபெறவுள்ளது. திரைக்கலைஞர்களுக்கான இந்த முதல் மாநாட்டை பிரதமர் மோடி பங்கேற்று தொடங்கி வைக்கிறார். 

வேவ்ஸ் உச்சிமாநாடு மும்பையிலுள்ள ஜியோ கன்வென்சன் மையத்தில் நடைபெறுகிறது. திரையுலகினர், தொலைக்காட்சித்துறை, அனிமேஷன், பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உள்ளிட்ட துறையை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் கலந்துகொள்ள அனில் கபூர், அமீர் கான், சிரஞ்சீவி, மோகன்லால், அக்சய்குமார், தீபிகா படுகோன், ஹேமமாலினி உள்ளிட்ட பல திரைபலங்கள் திரண்டு வந்துள்ளனர். 

வேவ்ஸ் உச்சி மாநாடு திரைத்துறையின் எதிர்க்காலத்தை மறுவரையறை செய்து, உலகளாவிய ஊடக மற்றும் பொழுதுபோக்கு மையமாக இந்தியாவை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்டுள்ளது.

Night
Day