தமிழகம்
நாளை முதல் SIR பணிகள் புறக்கணிப்பு
அதிக பணி நெருக்கடியை குறைத்திட வலியுறுத்தி நாளை முதல் SIR பணிகளை புறக்கணிக?...
மயிலாடுதுறையில் நடைபெற்ற நகராட்சி கூட்டத்தில் திமுக நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அக்கட்சி உறுப்பினர் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திமுக நகர மன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கணிணிகள் மற்றும் பிரிண்டர்கள் வாங்குவதற்காக நகராட்சி வருவாய் நிதியில் நான்கரை லட்சம் ரூபாய் செலவீனமாக ஒப்புதல் கோரப்பட்டது. இதற்கு திமுகவைச் சேர்ந்த 29வது வார்டு உறுப்பினர் ரஜினி எதிர்ப்பு தெரிவித்தார். நகராட்சி நிதியை வீணடிப்பதாகவும், எந்தப் பணிகளும் தரமாக நடைபெறுவதில்லை என்றும் குற்றம்சாட்டி நகராட்சி ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார். திமுக நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அக்கட்சியின் உறுப்பினரே வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு நிலவியது.
அதிக பணி நெருக்கடியை குறைத்திட வலியுறுத்தி நாளை முதல் SIR பணிகளை புறக்கணிக?...
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே 4 முகமூடி கொள்ளையர் கையில் உருட்டுக் க?...