நாளை முதல் SIR பணிகள் புறக்கணிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

அதிக பணி நெருக்கடியை குறைத்திட வலியுறுத்தி நாளை முதல் SIR பணிகளை புறக்கணிக்க போவதாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த பணிகளில் உரிய திட்டமிடல் இன்றியும், பயிற்சிகள் அளிக்காமல் அவசர கதிகள் பணிகள் மேற்கொள்ள நிர்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனால், அனைத்து நிலை வருவாய்த்துறை அலுவலர்களுக்கும் கடுமையான பணி நெருக்கடிகள், மன உளைச்சல் ஏற்படுத்துவதாக கூறி தமிழக தலைமைத் தேர்தல் அலுவலரிடம் ஏற்கனவே முறையீடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதிக பணி நெருக்கடிகளை குறைக்க வேண்டும், தினமும் காணொளி வாயிலாக மூன்று கூட்டங்கள் நடத்தி துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் SIR பணிகளை புறக்கணிக்க போவதாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த போராட்டத்தில் அனைத்து கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், அலுவலக உதவியாளர், வட்டாட்சியர் உள்ளிட்ட பலர் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day