மயிலாடுதுறை : மக்களை அச்சுறுத்தும் சிறுத்தையின் புதிய புகைப்படம் வெளியீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறையில் மக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையின் புதிய புகைப்படம் வெளியாகி உள்ளது. செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறைக்கு கடந்த 2ம் தேதி பொதுமக்கள் புகாரளித்தனர். இதனை அடுத்து கண்காணிப்பு காட்சிகள் மூலம் சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்த வனத்துறையினர், சிறுத்தையை பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 4 நாட்களாக போக்கு காட்டி வரும் சிறுத்தையை பிடிப்பதற்கு, வேட்டை நாய்கள் மற்றும் அதிநவீன ட்ரோன் கேமராக்கள் மூலம் சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். 

Night
Day