மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு வழக்கு : விசாரணைக்குழு பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு வழக்கில் சிறப்பு விசாரணைக்குழு எடுத்த நடவடிக்கைகள் குறித்து பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மதுரை மாநகராட்சியில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக விசாரணை குழு அமைக்கப்பட்டது. ஆனால், வழக்கை விசாரிக்கும் காவல்துறையினரும், இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்களும் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் உண்மை வெளிவராது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிடக்கோரி மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் அமர்வு, இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். 

Night
Day