மதுரை புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக்கோளாறு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் இருந்து மதுரைக்கு சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் நடுவானில் ஏற்பட்ட இயந்திரக்‍கோளாறு காரணமாக மீண்டும் சென்னைக்‍கு திரும்பி அவசரமாக தரையிறங்கியது.

70 பயணிகள் உட்பட, 75 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று காலை 8 மணிக்கு, 70 பயணிகள், 5 விமான ஊழியர்கள் என மொத்தம் 75 பேருடன் சென்னையில் இருந்து புறப்பட்டு மதுரை சென்றது. இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நடு வானில் பறந்த போது, திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை, விமானி கண்டுபிடித்தார். உடனடியாக விமானி அவசரமாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக திரும்பி வந்து தரையிறக்‍குமாறு உத்தரவையடுத்து அந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது.

Night
Day