வடகிழக்குப் பருவமழை தீவிரம் : சென்னையில் விடிய விடிய பெய்த கனமழை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் விடிய விடிய விட்டுவிட்டு பெய்த கனமழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 16ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதன்பின் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தீபாவளி பண்டிகை தினத்தன்று மாலை சில பகுதிகளில் மழை பெய்த நிலையில், நேற்று காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், சில மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து இரு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி இருப்பதால், தமிழ்நாட்டில் கனமழை கொட்டி வருகிறது. அதுமட்டுமல்லாமல் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று மாலை மழை சற்று குறைந்திருந்த நிலையில், இரவு முழுவதும் விட்டுவிட்டு கனமழை கொட்டியது. தாம்பரம், கிண்டி, ஈக்காட்டுதாங்கல், அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், தீபாவளி பண்டிக்காக சொந்த ஊர் சென்று திரும்பிய மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

Night
Day