பொதுப்பாதையை பயன்படுத்தும் பட்டியலின மாணவர்கள் மீது தாக்குதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சை அருகே உள்ள கிராமத்தில் பாதை பிரச்சனை காரணமாக பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளை, சாதி ரீதியாக திட்டி மூதாட்டி ஒருவர் கட்டைகளை கொண்டு தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கொல்லாங்கரை கிராமத்தில் பல ஆண்டுகாலமாக பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை, தனிநபர் தங்களுக்கு சொந்தமான பாதை என கூறி வேலி போட்டு பாதையை மறித்துள்ளனர். இதனால், அவ்வழியே செல்லும் பள்ளி மாணவ மாணவிகள், கல்லூரி மாணவ மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என பல தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த போராட்ட அறிவிப்பை அடுத்து கோட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமைதி பேச்சு வார்த்தையில் நிலம் தனக்கு சொந்தமானது என கூறும் நபர் நீதிமன்றத்தை நாடி தீர்ப்பு பெற்றுக்கொள்ள வேண்டும், அதுவரை பாதையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.  ஆனாலும், அந்த பாதை வழியாக சென்ற மாணவ மாணவிகளை கட்டைகளை கொண்டு மூதாட்டி ஒருவர் விரட்டினார். இதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட நிலப்பிரச்சினை தொடர்பாக உரிய பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பு மக்களுக்கும் சுமூக தீர்வை ஏற்படுத்தி தர வேண்டுமென பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day