பேருந்தில் வயதான ஆண்களை குறிவைத்து திருடிய 2 பெண்கள் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் பேருந்தில் பயணிக்கும் ஆண்களிடம் சில்மிஷம் செய்து திருடிய பெண்களை போலீசார் கைது செய்தனர்.


மத்தூர் பகுதியில் இருந்தும் ஊத்தங்கரை பகுதியில் இருந்தும் பேருந்தில் பயணிக்கும் ஆண்களிடம் பணம் மற்றும் நகை திருடு போவதாக தொடர்ந்து புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சிசிடிவி ஆதாரங்களை கொண்டு தேடி வந்த நிலையில் 2 பெண்களை கைது செய்தனர். விசாரணையில், வயதான ஆண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபடும் போது அவர்கள் ஏமாறும் தருணத்தில் அவர்களிடம் இருந்து நகை, பணத்தை திருடுவதாக ஒப்பு கொண்டுள்ளனர்.

Night
Day