புரட்சித்தாய் சின்னம்மா பிறந்தநாள் - நாகூர் தர்காவில் சிறப்பு பிரார்த்தனை

எழுத்தின் அளவு: அ+ அ-

புரட்சித்தாய் சின்னம்மாவின் 71வது பிறந்த நாளையொட்டி நாகை மாவட்டத்தில் உலக புகழ் பெற்ற நாகூர் தர்காவில், பரம்பரை ஆதீனம் எம்.எச். ஹாஜா சம்சுதீன் சாஹிப் ஏற்பாட்டின் பேரில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. புரட்சித்தாய் சின்னம்மா நீண்ட ஆயுளுடன் நோய் நொடி இல்லாமல் சிறப்பாக வாழவும், 2026ம் ஆண்டு சின்னம்மா தலைமையில் பொற்கால ஆட்சி அமைந்திடவும் வேண்டி சிறப்பு தொழுகை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு பிரியாணி உணவு வழங்கப்பட்டது. இதில் முகமது உசேன் சாகிப் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Night
Day