புயல் எதிரொலி: 3வது நாளாக மீன்பிடிக்க செல்லாத மீனவர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக கடலூர் மாவட்டம், தாழங்குடா, தேவனாம்பட்டினம், பரங்கிப்பேட்டை 49 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் 3 வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

புயல் காரணமாக கடலுக்கு மீன்பிடிக்கசெல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 3 வது நாளாக கடலூர் மாவட்ட மக்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைபடகுகள், நாட்டு படகுகள் காரையோரத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து 3வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததால் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day