புதுக்கோட்டை: பர்னிச்சர் கடையில் தீ விபத்து - பல லட்சம் ரூபாய் இழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை அருகே தீ விபத்தில் பொருட்களை இழந்த பர்னிச்சர் கடை உரிமையாளருக்கு வர்த்தக சங்கம் சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.  அறந்தாங்கி சந்தப்பேட்டை சாலையில் கடந்த 25ஆம் தேதி நகைக்கடை மற்றும் பர்னிச்சர் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சோலைராஜ் என்பவருக்கு சொந்தமான பர்னிச்சர் கடையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பாத்திரங்கள் பர்னிச்சர்கள் எரிந்து சேதமானது. இதனை அறிந்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, பர்னிச்சர் கடையை நேரில் ஆய்வு செய்து நிதி வழங்கினார்.

varient
Night
Day