பாஜக அலுவலகம், ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் உள்ள பாஜக அலுவலகம், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகம் மற்றும் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் விரைந்த போலீசார் மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் உதவியுடன் சோதனை செய்ததில் அது வெறும் புரளி என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. குறிப்பாக, ஒரே இமெயில் மூலம் 5 இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

அதே போல், ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகை திரிஷா வீட்டிற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுகுறித்து திரிஷா தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இன்று அதிகாலை அவரது வீட்டிற்கு சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் வீட்டை முழுவதுமாக சோதனையிட்டனர். வீட்டில் திரிஷா இல்லாத நிலையில் அவரது பணியாளர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பதும் சோதனையில் தெரியவந்தது.

Night
Day