நெல்லை: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரவலாக பெய்யும் மழை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் பரவலாக நல்லமழை பெய்துள்ளதால் பொதுமக்‍கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபாடு காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்‍கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில்  நெல்லை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலையில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக அங்கு 3 புள்ளி இரண்டு சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கோடை வெயில் சுட்டெரிக்‍கும் நிலையில், தற்போது பெய்த மழை காரணமாக இதமான சூழல் நிலவுவதால் பொதுமக்‍கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Night
Day