தென்காசி: மேக்கரை பகுதியில் உலா வரும் காட்டு யானைகள் - மக்கள் அச்சம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம் மேக்கரை பகுதியில் உலா வரும் காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். தென்காசி சுற்றுவட்டார பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் வனப்பகுதிகளில் உள்ள நீரோடைகளானது வறண்ட நிலையில்  காணப்பட்டு வருகிறது. இதனால் தண்ணீரை தேடி, காட்டு யானைகள் அங்குள்ள கிராமங்களை நோக்கி படையெடுத்து வருகின்றன. அந்த வகையில் மேக்கரை கிராமத்துக்குள் புகுந்த காட்டுயானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தியது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள், யானைகளை விரட்ட வனத்துறையினரிடம் புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர்.

Night
Day