திண்டுக்கல்: மைக் செட் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் தீ விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மைக் செட் வைக்கப்பட்டிருந்த இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நத்தம் அருகேயுள்ள கல்வேலிபட்டியை சேர்ந்த நாகராஜ் திருவிழாவுக்கு மைக் செட் அமைக்கும் தொழிலை செய்து வருகிறார். இவர் தனது தொழிலுக்கு தேவையான ஸ்பீக்கர் பாக்ஸ்கள், மைக் உள்ளிட்ட பொருட்களை தகர செட் அமைத்து பாதுகாத்து வந்தார். இந்நிலையில் அதிகாலையில் தகர செட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு அப்பகுதியே கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை போராடி அணைத்தனர். மேலும் இந்த தீ விபத்தால் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

Night
Day