நீட் மறுதேர்வு நடத்தக்கோரிய மனு தள்ளுபடி

எழுத்தின் அளவு: அ+ அ-

நீட் மறுதேர்வு நடத்த வேண்டும் என 16 மாணவர்கள் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.

இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 4-ம் தேதி நடத்தப்பட்டது. அன்றைய தினம் சென்னையில் பெய்த கடும் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதனால் தங்களால் முறையாக தேர்வு எழுத முடியவில்லை என்றும் அதனால் 4ம் தேதி தேர்வை ரத்து செய்து விட்டு மறுதேர்வு நடத்த உத்தரவிடக் கோரி ஆவடி, குன்றத்தூர் மற்றும் கே.கே. நகர் தேர்வு மையங்களில் தேர்வெழுதிய 16 மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

இதனை விசாரித்த நீதிபதி குமரப்பன், நீட் தேர்வு முடிவுகளை வெளியிடஇடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இந்தநிலையில் இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மின்தடையால் நீட் தேர்வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் மாணவர்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளதால் மறு தேர்வு நடத்த முடியாது என தேசிய தேர்வு முகமை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, மத்திய அரசு நடத்திய விசாரணையில் எடுக்கப்பட்டுள்ள முடிவு நியாயமானது என்றும் 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ள நிலையில் மறுதேர்வு நடத்த உத்தரவிட்டால் அது தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறி மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Night
Day