நாளை கன்னியாகுமரி வருகிறார் பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரி வரவுள்ளதையடுத்து மாவட்டம் முழுவதும் 2ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மக்களவை தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், பிரதமர் மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக பிரதமர் மோடி நாளை தமிழகத்திற்கு வருகை தருகிறார். அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் மோடி, அங்கு சிறப்புரையாற்றுகிறார். இதனையொட்டி, கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதற்காக டெல்லியிலிருந்து பாதுகாப்புப் படை அதிகாரிகள் கன்னியாகுமரி வந்துள்ளனர். இதற்காக அகஸ்தீஸ்வர பகுதியில் வாகன ஒத்திகை நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Night
Day