நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னையில் 2-வது நாளாக ஆலோசனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்‍களவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு 2வது நாளாக ஆலோசனை நடத்தி வருகிறது. 

இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் மாநிலங்கள் தோறும் நாடாளுமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் அஜய் பதூ தலைமையில், நாடாளுமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் காணொலி காட்சி வாயிலாக இந்த ஆலோசனைக்‍ கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.  

Night
Day