நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஏப்.12ம் தேதிக்குள் 1-9ம் வகுப்பு முழுஆண்டு தேர்வுகள் நிறைவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஒன்றாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு முழு ஆண்டுத்தேர்வுகளை ஏப்ரல் 12க்குள் நடத்தி முடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளையுடன் நிறைவடைகிறது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில், 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு எப்போது நடைபெறும் என்று கேள்வி எழுந்தது. இதையடுத்து, மக்களவை தேர்தலை முன்னிட்டு 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 2ம் தேதி முதல் 12ம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Night
Day