நாகை: அரசு அலுவலகத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகையில் அரசு அலுவலகத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் தொழில் மையம் இயங்கி வருகிறது. இங்குள்ள ஊழியர்கள் வழக்கம் போல சாப்பிட்டுவிட்டு கை கழுவ சென்றனர். அப்போது அங்கு ஜன்னலில் சுற்றி இருந்த பாம்பை பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர்,  5 அடி நீளம் உள்ள கொம்பேறி மூக்கன் ரக பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

Night
Day